சனி – வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் அருகே நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்றுமாலையில் நிகழவுள்ளது.
சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிசயம் இன்று வானில் நிகழப்போவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn) சரியாக 397 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன என்பது ஆச்சரியமான சேதி

அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு (Angular Distance) புள்ளி ஒரு டிகிரியாக (0.1 Degree) இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பார்வைக் கோண நெருக்கம், இன்றுமலை அமையவுள்ளது
இதே போன்ற ஓர் அதிசய நிகழ்வு அடுத்த 2080 ஆம் ஆண்டில் மீண்டும் நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உண்மையில் அந்த இரண்டு கோள்களும் அருகில் இருக்காது. அவற்றின் தூரம் மிக அதிக அளவில் இருந்தாலும் அவை நேர்கோட்டில் இணைவதால் அவ்வாறு தோன்றுமாம்.

நிஜத்தில் வியாழன் கோளானது பூமியிலுருந்து சராசரியாக 88.6 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும், சனி கோளானது பூமியிலுருந்து சராசரியாக 162 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. எனவே இவற்றிற்கு இடைப்பட்ட உண்மையான தொலைவு 74 கோடி கிலோ மீட்டரைவிட அதிகம் எனவும் கூறுகின்றனர்.இவ்வளவு தொலைவில் இவை இருப்பதால், இந்த நிகழ்வு நடைபெறும் சமயத்தில் இந்த கோள்கள் நம் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக மிக குறைவுதான் பயப்பட வேண்டாம்.
என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது பார்க்க இயேசு பிறந்தபோது ஒருந்த வால் நட்சத்திரம் போலவே இருப்பதால் இதை கிருஸ்துமஸ் நட்சத்திரம் எனவும் சொல்கின்றனர். இன்று மாலையில் இதை வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்