சென்னை மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணி நடக்க இருப்பதாகவும். எனவே பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை எனவும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. சசிகலா சென்னை வரும்போது ஜெயலலிதா நினைவிடத்தில் செல்லாம தடுப்பதற்கான யுக்தி என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறைக்குச் செல்லுவதற்கு ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார்.
சமாதியில் கையால் ஓங்கி அடித்து சபதம் எடுத்துக்கொண்டார். சசிகலாவுக்கு கடந்த 27-ம் தேதி சிறைத்தண்டனை முடிந்துவிட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெப்க்களூர் மருத்துானையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் ஆன பிறகு, இப்போது அங்கேயே ஓய்வில் இருக்கிறார். வரும் 7-ம் தேதி அல்லது 10-ம் தேதி சசிகலா சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் சசிகலா நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சிம்பதியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது காரில் அ.தி.மு.க கொடிகட்டி பரபரப்பை கிளப்பிய சசிகலா, சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மீண்டும் பரபரப்பை கிளப்பக்கூடாது என்பதற்காக ஆளும் தரப்பினர் முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாடை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எப்படியும் சசிகலா சென்னை வரும்போது அரசியல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.