ஆந்திர மாநிலம் ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் சற்று முன்பு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தகவல் தொடர்புக்கான செயற்கைகோளுடன் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ் -01 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளது. 1400 கிலோ எடை கொண்ட இந்த சிஎம்எஸ் -01 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 7 ஆண்டுகளாகும்.