இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் போன்று சீனாவும் ஆக்கிரமிப்பு மற்றும் திடீர் தாக்குதல் என குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதே சமயம் சீனாவின் எல்லாவிதமான தாக்குதல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியாவின் செயல்பாட்டை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் பணி நிறைவுபெற்று செல்லும்போது, “சீனாவின் நீண்டகால அச்சுறுத்தலை இந்தியா திறம்பட எதிர்கொள்கிறது. ஆண்டு முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவம் மற்றும் பிற துறைகளிலும் நல்லுறவு மேம்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் போலவே, எந்தவொரு நாடும் இந்தியாவுடன் வலுவான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறவைக் கொண்டிருக்கவில்லை” என கருத்து தெரிவித்துளார்