டிசம்பர் 26 வரை 4.15 கோடி வரி செலுத்துபவர்கள் 2020-2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான (நிதி ஆண்டு 2019-20) வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தனிநபர்கள் தாக்கல் செய்யவேண்டிய வருமான வரி கணக்குக்கான கடைசி தேதி நெருங்குவதால் கடைசி நிமிட அவசரத்தை தடுப்பதற்காக சீக்கிரம் தாக்கல் செய்ய வரி செலுத்துபவர்களை வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பர் 26 வரை, 4.15 கோடிக்கும் அதிகமான வரிசெலுத்துபவர்கள் மதிப்பீட்டு ஆண்டு 2020-21 க்கான வருமான வரி கணக்கை ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டனர். நீங்களும் உங்களுடைய கணக்கை தாக்கல் செய்துவிட்டீர்கள் என எண்ணுகிறோம், என வருமான வரித்துறை டிவிட்டரில் டிவீட் செய்துள்ளது.
இதில் 2.34 கோடி வரிசெலுத்துபவர்கள் ITR -1 யும், 89.89 லட்சம் வரி செலுத்துபவர்கள் ITR -4 யும், 49.72 லட்சம் வரி செலுத்துபவர்கள் ITR -3 யும், 30.36 லட்சம் வரிசெலுத்துபவர்கள் ITR -2 யும் தாக்கல் செய்துள்ளனர்.
நிதியாண்டு 2019-20 க்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 30, டிசம்பர் 2020 அன்றுடன் முடிவடைகிறது.
கோவிட் -19 காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2020 மற்றும் அக்டோபர் 31, 2020 என தலா இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது