எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் யோசித்து கொண்டிருக்கிறீர்களா உங்களுக்குகான பதிவுதான் இது ஆரோக்கியம் தான் மிக முக்கியமான ஒரு செல்வமாக மனிதனால் பார்க்கப்படுகிறது.
நோய் வரும்போது அதை குணப்படுத்த நினைப்பதை விட ஆரோக்கியமாக இருக்கும் போதே நோய் வருவதை தடுப்பதை தான் புத்திசாலித்தனமான செயல். ஆயுர்வேத முறைப்படி நோய்களை தடுப்பது என்பது முதலில் குடல், பெருங்குடல் மற்றும் கல்லீரலில் இருந்து நச்சுக்களை அகற்றுவதாகும்.
ஏனெனில் இவையே பொதுவாக மலச்சிக்கல் மற்றும் உடலில் நச்சுகள் சேருவதற்கு காரணமாக அமைகின்றன.
சரியான உணவை உட்கொண்டு எடையை குறைப்பதன் மூலமே இந்த அனைத்து பிரச்சனைகளையும் நம்மால் எதிர்த்து போராட முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே உங்கள் எடை இழப்பிற்கு உதவுவதற்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவதற்கும் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது நல்ல பலனை தரும்.
200 மில்லி வெது வெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிய வேண்டும் அல்லது எலுமிச்சை சாறை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள பெரிஸ்டால்சிஸ் உணவில் உள்ள கழிவுகள் கீழ்நோக்கி அனுப்பி வைக்க உதவும். ஒருவேளை நீங்கள் மெலிந்த உடல் அல்லது நடுத்தர உடலை கொண்டவரானால் எலுமிச்சைக்கு பதில் தண்ணீரில் ஒரே ஒரு தேக்கரண்டி நெய்யை பயன்படுத்தலாம்.
இந்த செய்முறையானது நமது செரிமான பாதையை மேம்படுத்துவதற்கும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மூலிகை தேநீர்
காலையில் தேநீர் உட்கொள்வது என்பது இந்திய மக்களிடையே பாரம்பரிய மாக் இருந்து வரும் ஒரு வகை பழக்கமாகும். ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கும் பானமாக தேநீரை மாற்றலாம். இதற்கு ஒரு கலவையை தயார் செய்ய வேண்டும்.
1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்,
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் அல்லது கொத்தமல்லி,
1 ஏலக்காய் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவிட்டு பின்னர் அந்த நீரை ஆறவைத்து அருந்த வேண்டும். இது உங்கள் வயிற்றில் வீக்கம் மற்றும் அஜீரண பிரச்சினைகள் யாவையும் குறைக்க உதவும்.
அப்புறமென்ன ட்ரை செய்துப் பாருங்க…