நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொள்ள மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அந்தபயணத்திற்காக இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
அதில் நித்தியானந்தா கூறியிருப்பதாவது, ‘கைலாசாவுக்கு வருகை தர விரும்பும் கைலாஷ் பிரியர்கள் இன்று முதல் கைலாசாவின் contact@kailaasa. org என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம்.’’எனக் கூறப்பட்டுள்ளது.

எப்படி செல்வது?
வருகை தருபவர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும் .மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும்.

மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும்வரை உணவு ,தங்குமிட வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து செல்லப்படுபாவர்கள் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கின்ற நபர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் கையிலாசாவில் தங்க அனுமதி இல்லையாம்.இந்த விதிமுறை ஏன் என் தெரியவில்லை மேலும், சிவனை வழிபடுகின்ற ஆன்மிக நோக்கத்தோடு மட்டுமே வருகை தரவேண்டும். ஒருநாள் நேரடி தரிசனத்திற்கும் அனுமதி” எனக் கூறியிள்ளார்.
கருடனில் ஏறி கைலாசாவுக்கு செல்ல ஆசையுள்ளவர்கள் மெயிலை தட்டுங்க…சும்மா என்ஜாய் பண்ணுங்க…