மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித வின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி நினைவு மண்டபம் எழுப்ப ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி அன்று ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோர் துவக்கிவைத்தனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பணியில் சற்று வேகம் குறைந்து காணப்பட்டது. இருப்பினும் நினைவுமண்டபத்தில் அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக தமிழக அரசு ஒரு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளது. சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விரைவில் வர இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே புதிய திட்டங்கள் செயல்படுத்தமுடியாது. அதனால் அதற்குள்ளாக பணிகளை விரைந்துமுடித்து திறப்புவிழா காண தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.