பழங்களினால் ஃபேசியல் செய்யும் பொழுது பக்கவிளைவுகள் வராது என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் கிடைக்கின்றது .குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களில் நிறைய நன்மைகள் இருக்கிறது.
பட்டர் ஃப்ரூட் என்று அழைக்கப்படும் அவகடோ சதைப்பற்றுடன் சிறிது வெண்ணை, தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்குகின்றது. தோலின் முதுமை தன்மையும் குறைகின்றது. வாழைப்பழத்தின் தோல் மிகவும் நல்லது. காட்டன் அரிசி மாவு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் நீங்குகின்றது முகத்தில் பொலிவு பெறுகின்றது.
வாழைபழத்தோலை ஒட்டி இருக்கும் சதைப் பகுதியுடன் 10 சொட்டு கிளிசரின் கால் டீஸ்பூன் சர்க்கரை கலந்து அப்படியே முகத்தில் வைத்து தடவி 10 முதல் 15 நிமிடம் வரை வைக்க வேண்டும். இந்த வாழைப்பழ பேசியல் இறந்த செல்களை நீக்கி முகத்தை அதிகப்படுத்துகின்றன. அடுத்ததாக என்சைம்கள் அதிகமாக உள்ளது. இவை இயற்கையாகவே ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகின்றது. இதேபோல் ஸ்ட்ராபெர்ரியை மிக்ஸியில் அரைத்து அத்துடன் தேன் மற்றும் மக்காச்சோளம் மாவு கலந்து முகத்தில் போடுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கின்றது.