இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8-ம் தேதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவிலானோர் அங்கு ஒன்று திரண்டிருந்தனர்.
மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு ஸ்தூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு ஸ்தூபி ஆகியவற்றை உடைக்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு வலுத்ததால் அந்த இரு ஸ்தூபிகளையும் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி உடைக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டம் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியை மீண்டும் அமைக்க இன்று அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்தூபியை அமைப்பதற்கு இலங்கை அரசும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவோ அனுமதி வழங்கியுள்ளதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.