திருச்சி தா பேட்டை லட்சுமாபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல். கட்டிட தொழிலாளியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் கோபி (29) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் கோபி பலத்த காயமடைந்து கை, கால்கள் செயலிழந்து, பேசமுடியாமல் படுத்த படுக்கையானார். இவரை தங்கவேல் தம்பதியார் பராமரித்து வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் செல்வராணி கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
தனி ஒரு ஆளாக மகனை பராமரிக்க முடியாத தங்கவேல் படுக்கையில் கிடந்த மகனுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். கோபி மயங்கிய உடன் அவரின் கழுத்தை அறுத்து கொன்று உடலை வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் மறைந்த்துள்ளார்.
இந்நிலையில் பேரனை காணாதது குறித்து தங்கவேலின் தாயார் சந்தேகமடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் தங்கவேல் உண்மையை கூறியுள்ளார். இது குறித்து தா பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தங்கவேலை கைது செய்து உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்