சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்ததுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை ரீச் சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே சுங்கச்சாவடிகளை கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கன நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கூட அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி சுங்கச்சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் பாஸ்டேக் வசதி உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாதவர்கள் அதிகபட்சமாக வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிவரை மட்டுமே டோல்கேட்டில் டிக்கெட் எடுத்து செல்லமுடியும்.