கடந்த 4 நாட்களாகவே அதிமுக – பாஜக கூடாரம் பற்றிக்கொண்டு எரிந்தது.. திடீர் திடீரென பாஜக நிர்வாகிகள், அதிமுக பக்கம் கிளம்பி சென்றார்கள். அப்படி செல்லும்போது, பாஜக மாநில தலைமையை விமர்சித்துவிட்டும் போனார்கள்.
நேற்றைய தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எப்படியும் அதிமுக – பாஜக மோதல்போக்கு குறித்து எடப்பாடி தலைமையில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, பாஜ தலைவர்கள் அதிமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருவது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாம்.. அப்போது, குறிப்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பலரும் ஆவேசமாகவும் கூட்டத்தில் கருத்து கூறியிருக்கிறார்கள்.. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லையாம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அதிமுகவின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்ன? எடப்பாடியின் உருவபொம்மையை தீயிட்டு எரிக்கும் அளவுக்கு சென்ற நிலையில், திடீரென கூட்டணிக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்ல அதிமுக தலைவர்கள் சொல்ல காரணம் என்ன? என்ற புதுகுழப்பம் எழுந்துள்ளது.. அப்படியானால், “அண்ணாமலையும் – எடப்பாடியும் சேர்ந்து நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்” என்று கேசி பழனிசாமி சொன்னதெல்லாம் உண்மையா? என்றும் சிலர் சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளனர்.. அடுத்து என்ன நடக்க போகிறது? பார்ப்போம்…!!