நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த திமுகஆட்சியில் இடம் கிடையாது என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, விரைவில் கழக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த துரை பிரிதிவிராஜ். 2011-ம் ஆண்டு முதல் இவர் தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் ஒரு கிராம நிர்வாக அலுவலராய் விதிகளுக்கு உட்பட்டு அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன் ஆனாலும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்த கட்டமைப்பில் என்னால் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் என்னை தொடர்ந்து கொண்டே இருப்பதாக கூறி தனது பதவியை பிரிதிவிராஜ் ராஜினாமா செய்திருந்தார். இது சமூகவளைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் ஒன்னை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய VAO தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், இவ்வாட்சியில் அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததாலும் , மக்கள் பணி செய்வதற்கு நிர்வாகமே தடையாக இருப்பதாலும் பல்வேறு நிர்வாக திறமையுள்ள அதிகாரிகளை இழந்து வருகிறோம் , அரசு அதிகாரிகள் என்றும் மனம் தளராது, தொடர்ந்து மக்களுக்கு நல்ல பணிகள் பல செய்திட வேண்டுகோள் விடுக்கிறேன்,விரைவில் கழக ஆட்சி மலரும் , நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.