கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்டபோது தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என திமுக எம்.பி கனிமொழி விமர்சித்த நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில தேர்தல் பாஜக இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிறுத்தப்பட்டதை அமைதியாக வேடிக்கை பார்த்த அண்ணாமலைக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப் படுவார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பா பாதியில் நிறுத்திய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.