விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சிகள் நடத்த இருந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.ஆனால் இப்போராட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கடிதம் கொடுக்கப்பட்டது ஆனால் போலீசார்கள் அந்த அனுமதியை அளிக்க மறுத்துவிட்டனர்.