டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டம் ஒவ்வொரு கட்டமாக வெடித்து தற்போது கைகலப்பு வரை சென்றிருக்கிறது. விவசாயிகளை விரட்டி அடித்துள்ளனர் காவல்துறையினர்.
இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி
விவசாயிகளில் ஒரு பிரிவினர் அனுமதி மறுக்கப்பட்ட பாதைகளில் டிராக்டர்கள் பேரணி நடத்தியதால் போர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. வாகனங்கள் வழக்கம் போல இயங்க தொடங்கி உள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்த மோதலில் மொத்தம் 83 போலீசார் படுகாயமடைந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.