திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி. இவருடைய வயது 19. இவர் கடந்த 3ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலை நோக்கி சென்றுள்ளார்.அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25) கௌதமியை பின்தொடர்ந்து வந்து கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
அவரிடமிருந்து எப்படியாவது தப்பிப்பதற்காக கெளதமி கத்தியை பிடுங்கி அஜீத்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்து நடந்தவற்றை எடுத்துக்கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அஜித் குமாரின் உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை தற்காப்புக்காக செய்யப்பட்டதுதான் என போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து தற்காப்புக்காக நடந்த கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ் பி அரவிந்தன் அறிவித்துள்ளார்