மும்பையில் நைட் கிளப் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மராட்டிய மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு கிளப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிக நேரம் செலவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அதன் பின்னர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சுசானே கான், பாடகர் குரு ரந்தவா உள்ளிட்ட 34 பேர் போலீசாரால் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்தக் கதவைத் திறந்து வைத்திருந்த குற்றத்திற்காக அந்த கிளப்பில் வேலை செய்யும் ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கிளம்பி திறந்து வைத்திருந்ததால் அதுபோக சமூக வலைகள் ,முகக் கவசம் அணிதல் என தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாததால் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக கொரானா வைரஸை பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அது என பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.