சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு வக்கீலை நியமித்து அவரது தலைமையில் ஏலம் விட கர்நாடக அரசுக்கு பெங்களூரு ேகார்ட்டு உத்தரவிட்டுள்ளது
இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, “சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி அரசுக்கு உத்தரவிட கோரி நான் சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.
அந்த மனு மீது விசாரணை நடத்தி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் 3 பொருட்களை மட்டும் ஏலம் விட கோரினேன். ஆனால் கோர்ட்டு, சம்பந்தப்பட்ட 29 பொருட்களையும் ஏலம் விடுமாறு உத்தரவிட்டுள்ளது.
இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை விரைவில் சந்திக்க உள்ளேன். அப்போது, இந்த கோர்ட்டு உத்தரவு நகலை வழங்கி, இதை விரைவாக செயல்படுத்துமாறு கோர முடிவு செய்துள்ளேன். இந்த விஷயத்தை நான் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளேன்”.