சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இலங்கையை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜன.10) ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்பு உள்ளது.

11-ம் தேதி ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மிக கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இடியுடன் கன மழை எய்ய வாய்ப்புனுள்ளது. மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழையும், சில தென் மாவட்டங்கள்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. 13-ம் தேதி தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்.