தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சசிகலா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. தமிழக முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெற்றது பற்றி பேசிய போது அதை நாகரிகமற்ற முறையில் வெளிப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது.
இதுகுறித்து வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர், பெண்களை அவமதிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகத்தை தூண்டுவது, ஆபாசமாக பேசுவது, பொது இடத்தில் பெண்களை அவமதிப்பது, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.