வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லைகள் இருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனடியாக போகிவிடும். வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றி மயக்கம் ஏற்படும் இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கஷாயமாகக் காய்ச்சி அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் இருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம்.
விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு அரை டம்ளர் தண்ணீரில் குடித்தால் உடனே விக்கல் நின்றுவிடும்.
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் உடனே அதிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். டீத் தூள் குறைவாகவும் ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும் அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவித்தாலும் மன அழுத்தம் சட்டென்று குறைய வாய்ப்புள்ளது.
தலைவலி ,வாந்தி, குமட்டல், மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும் அதேநேரம் ஏலக்காயை அதிகமாக அடிக்கடி வாயில் போட்டுக்கொள்வது நல்லதல்ல. அதனால் தினமும் ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் நாம் மிக புத்துணர்வாக செயல்படலாம்.