உலக நிகழ்வுகளை முன்பே கணிக்கக் கூடிய பாபா வங்கா அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில் சில முக்கிய தகவல்கள் தற்போது தெரிய வந்துள்ளன.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக இருந்து வந்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவருடைய கண் பார்வைத் திறன் குறையத் தொடங்கியது முற்றிலும் பார்வையை இழந்தார் இருப்பினும் பாபா கணித்துக்கூறும் ஒவ்வொரு நிகழ்வும் சரியாக நடந்து இருக்கின்றது.

இவர் 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 85 வயதில் உயிரிழந்தார். ஆனால் அதற்கு முன்னதாக பல விஷயங்களை முன் கூட்டியே கணித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். அதே போன்று தாக்குதல் நிகழ்ந்தது உலகையே அதிர வைத்தது.
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார் அதேபோல் ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும் ஐரோப்பியாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் அன்றே அதை கணித்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படி இவர் கூறும் அனைத்து விஷயங்களும் 68 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை நடைபெற்று உள்ளது இதனால் இன்னும் அடுத்தாண்டு வருவதற்கு ஒரு சில வாரங்களே இருப்பதால் இவரின் கணிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்
அந்த வகையில் வருகிற 2021 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா வின் கணிப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
ஐரோப்பா மீது மஸ்லீன் தீவிரவாதிகள் படை எடுத்து கொண்டு வரும். நமது கண்டம் மஸ்லீன் படையெடுப்புக்கள் இடமிருந்து இரசாயனத் தாக்குதலை எதிர்கொள்ளும் என்றும் கணித்துள்ளார். அடுத்த காலகட்டத்தில் ஐரோப்பிய கண்டம் முடிவை கண்டுவிடும் அதாவது இவர் ஐரோப்பியர்களுக்கு எதிராக தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவார்கள்.
2021 ஆம் ஆண்டில் ஐரோப்பியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான ஒரு கொலை முயற்சி ஏற்படும். அவருக்கு ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தல் அவரது நாட்டிலிருந்தே ஏற்படும்.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மர்மமான நோயால் பாதிக்கப்படுவார். அது காது கேட்காது. கூடவே மூளை பிரச்சினை சம்பந்தமாக உள்ள நோயாக இருக்கும்.
ரயில்கள் சூரிய ஒளியை பயன்படுத்தி பறக்கும். பெட்ரோல் உற்பத்தி நின்று போய்விடும். சூரிய ஆற்றல் பற்றி அதிக விவாதங்கள் தொடங்கும். ஒரு வலிமையான டிராகன் மனித குலத்தை கைப்பற்றி மூன்று, ஒன்று கூடுவார்கள் அதில் சிலரிடம் சிவப்பு பணம் இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
டிராகன் என்று குறிப்பிடுவது சீனா என்று ஒரு சிலர் கருதுகின்றனர். மூன்று நட்சத்திரங்கள் என்பதை ரஷ்யா இந்தியா சீனா ஆகியவை இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர்.சிவப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதால் அது சீனாவின் யுவான் நோட்டுகள் சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். எனவே இது நிச்சயமாக சீனாதான் என்று உறுதியாக கருதுகின்றனர். பார்க்கலாம்..என்ன நடக்கிறது என்று!