பாரம்பரியமான பொருள்கள் எல்லாமே சத்தானது. பக்கவிளைவுகள் இல்லாதது என்பது உண்மை தான். ஆனால் அவை எல்லாம் சருமத்துக்கு பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது.
பல நூற்றாண்டுகளாக கடலை மாவு தோல் பிரச்சனைகளை எதிர்த்து போராடும் மூலிகையாகவும், சருமத்தை திறம்பட வைக்கவும் செய்கிறது. இது எப்போதும் பிரகாசமான பளபளப்பை வழங்குகிறது.
எல்லா விதமான சருமத்துக்கும் கடலை மாவு பயன்படுத்தலாம் என்றாலும் சிலருக்கு ஒவ்வாமை காரணமாக தோலில் தடிப்பு மற்றும் அலர்ஜியை உண்டு செய்துவிடலாம். சருமத்துக்கு கடலை மாவு உண்டு செய்யும் பக்கவிளைவுகளை பார்ப்பதற்கு முன்பு அதன் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
- கடலை மாவு சருமத்தை சுத்தம் செய்கிறது.
- இது கரும்புள்ளிகளை எதிர்த்து போராட செய்கிறது.
- சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது
- மூக்கின் மேல் கரும்புள்ளி மற்றும் வெள்ளை புள்ளிகளை போக்குகிறது.
- வயதான தோற்றத்தை தடுக்கிறது
- சருமத்தை மினுமினுப்பாக வைக்கிறது.
- முகத்தில் இருக்கும் முடியை வெளியேற்றுகிறது.
- சருமத்தின் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.
- சரும டான் ஆவதை தடுக்கிறது
- முகப்பருவை தீவிரமாகாமல் தடுக்கிறது.
- இது இயற்கையானது என்பதால் சருமத்துக்கு நல்லது என்று சொல்ல முடியாது. சருமத்தின் அமிலத்தன்மை அளவுகள், ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மற்றும் இயற்கை எண்ணெய்களுடன் இதன் இராசயனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும்.இயல்பாகவே இதை அடிக்கடி பயன்படுத்தினால் இவை சருமத்தை உலர்த்தலாம். இது இயற்கையில் காரமானது. அதனால் அடிக்கடி பயன்படுத்தும் போது சருமத்தின் பிஹெச் அமிலம் பாதிக்கப்படலாம். இது அதிக வறட்சியை உண்டு செய்யலாம். அதிலும் முகப்பரு புண்கள் அதிகமாக இருந்தால் இதை தவிர்ப்பதே நல்லது. எல்லோருக்கும் ஒவ்வாமை இருக்காது. சிலருக்கு இவை இருக்க செய்யலாம்.