நாம் அருகம்புல்லை இதுவரை சாமிக்கு வைத்து மட்டும் தான் பார்த்திருப்போம் ஆனால் அருகம்புல்லில் பல மருத்துவத் தன்மைகளும் இருக்கிறது.
அறுகம்புல்லை எப்பொழுதும் தப்பித்தவறி பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிட்டு விடக்கூடாது பசியெடுத்தபின் அருகம்புல்லை எடுத்து சாப்பிட்டு பாருங்கள். தினமும் அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழத்தை எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி சாப்பிட்டு வந்தால் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் குணமாகிவிடும்.

தினமும் அருகம்புல்லை ஜூஸ் ஆக செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் தொப்பை குறைந்துவிடும் .தினமும் அருகம்புல் ஜீஸ் குடித்தா நரம்புத் தளர்ச்சி ஏற்படவே ஏற்படாது. இந்த அருகம்புல்லினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது.
ரத்தத்தில் ஏதாவது விஷத்தன்மை உள்ளது என்றால் அதையும் அருகம்புல் வெளியேற்ற செய்கின்றது. தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து நம் உடலை வலிமைப்படுத்தும் நோயற்ற வாழ்வை வாழ்வோம்.