காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் திவிரவதிகளுக்கும் நடந்த மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தின் கனிகம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்த இராணுவம், மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎப்) மற்றும் மாநில காவல்துறையினர் அடங்கிய கூட்டு படையினர் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் தீவிரவாதி ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்படடார், பாதுகாப்பு படைவீரர்கள் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்ட நிலையில் கொல்லப்பட்ட தீவிரவாதியை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.