தேர்தல் நேரமான இப்போது முறைகேடுகளும் அதிகம் நடக்கும். சில கட்சிகள் நம்மை பணம் கொடுத்து வளைக்கப் பார்க்கும். சிலரோ பரிசுப்பொருள்களைக் கொண்டுவந்து நீட்டுவார்கள். ஏதோ ஒருவகையில் வாக்காளர்களை வேறுவகைகளில் கவனித்துவிட சிலர் துடியாய் துடிப்பார்கள்.
இதோ இப்போது தேர்தல் ஆணையம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கும்வகையில் சூப்பர் ஆப் ஒன்றை வைத்திருக்கிறது.அதுதான் சி_விஜில் ஆப்! வாருங்கள் இதை எப்படி பயன்படுத்துவது எனப் பார்ப்போம்.
உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் c vijil என டைப் செய்து அதைத் தேடி பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த ஆப்பில் மொபைல் எண்ணப் பதிவு செய்தால் ஒரு தடவை மட்டும் வரும் ஓடிபி வரும். அதை பயன்படுத்தினால் நம் மொபைல் எண்ணும் ரிக்கார்ட் ஆகும். அல்லது மொபைல் எண் இல்லாமலும் இதை டவுண்லோடு செய்யலாம்.
இந்த ஆப்பில் வோட்டுக்குப் பணம் கொடுப்பது, மது விருந்து, பொய்யான செய்திகளை பணம் கொடுத்து பிரசுரிக்க செய்வது, வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது, வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது என அனைத்து விதமான புகார்களையும் இந்த ஆப் மூலம் கொடுக்க முடியும். இதில் புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாகவும் புகார் கொடுக்கமுடியும். புகார் கொடுத்ததும் அடையாள எண் வரும். அதை ட்ராக் செய்து புகாரின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த புகார்கள் புகார் அளித்தவரின் மாவட்ட தேர்தல் கட்டுப்பாடு அலுவலகத்துக்குச் செல்லும். உடனே பறக்கும்படை, தனிப்பட்டை அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்துவார். புகாரில் உண்மை இருந்தால் மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்துவார். அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறைதீர்வு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.புகார் அளித்த 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள இந்த ஆப், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு இருக்கும்வரை செயல்பாட்டில் இருக்கும்.