2024 நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக 5 இடங்களை வாங்கிட்டுக்கொண்டு பாஜக அமைதியாக இருக்காது, இந்த முறை அதிமுகவிடம் பாஜக கூடுதல் இடங்களை கேட்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை – அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது.
அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவர்கள் மூவரும் நடந்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தத்த்து என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வரிசையாக தேர்தல்களில் தோற்று வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார், சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார் என்று வரிசையாக தோல்வி அடைந்து வருகிறார்.