முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே பேன்ஸ் கிளப் வைத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.
அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பேமஸ் ஆனவர் சித்ரா. இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்துதான் சீரியலில் நடிக்க வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த சித்ராவின் ‘கிராமத்து மொழிநடைப் பேச்சு’ அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும். தமிழகம் முழுவதுமே பரவலாக சித்ராவுக்கு ரசிகர் வட்டம் உண்டு. இந்நிலையில் சித்ரா திடீரென நட் சத்திர விடுதி ஒன்றில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதனிடையே சித்ராவின் மரணம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார். இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நம் அனைவரும் தெரிந்ததே. இது சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் அவருடன் இருந்த அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் அவருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் அனைவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையின்போது நடிகை சித்ரா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்ட தகவல் வெளிவந்தது.
சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது ஹேமநாத் குடித்து விட்டு அடிக்கடி சென்று தகராறு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டு பிரிந்து வரும்மாறு அடிக்கடி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரின் காரணமாக சித்ராவின் கணவனான ஹேம்நாதை நசரத்பேட்டை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.