ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அங்கு சிலர் வன்முறையை பரப்ப இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு இருந்ததால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இணைய சேவை வழங்கப்படாத நிலையில் இப்போது ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தனது ட்விட்டர் பக்கத்தில், “4 ஜி மொபைல் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. இந்த சேவைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.