கோவிட் -19 பரவல் காரணமாக மத்திய அரசு, மோட்டார் வாகன ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் (RC), பெர்மிட் ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2021 மார்ச் 31 வரை நீட்டித்து வழங்கியுள்ளது. பிப்ரவரி, 1, 2020 அன்றுடன் காலாவதியாகும் வாகன ஆவணங்கள் அனைத்தையும் புதுப்பித்துக் கொள்வதற்காக இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வாகன ஆவணங்களை புதுபிப்பதற்காக இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த கால அவகாசம் என்பது நான்காவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற அவகாசம் நீட்டிப்பு 2020 மார்ச் 30, ஜூன் 9 மற்றும் ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்கனவே 2020 பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் காலாவதியாகும் அனைத்து வாகன ஆவணங்களும் 2020 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என அறிவித்திருந்தது.
கோவிட்-19 பரவலை தடுக்க வேண்டும் என்ற தேவையை கருத்தில் கொண்டு 1 பிப்ரவரி 2020 அன்றுடன் காலாவதியாகும் அனைத்து வாகன ஆவணங்களும் மார்ச் 31, 2021 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்படுகிறது, என மத்திய அமைச்சகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் 1 பிப்ரவரி 2020 அன்றுடன் காலாவதியான வாகன ஆவணங்களை மார்ச் 31, 2021 வரை செல்லுபடியாக கூடிய ஆவணங்கள் என கருதி நடந்துக்கொள்ளுமாறு, அந்த அறிக்கையில் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது