தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் புதுவீடுகள் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் நன்றி தெரிவித்துப்பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’சென்னை பெரும்பாக்கத்தில் 116.27 கோடியில் 1152 வீடுகள் கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் 2023ம் ஆண்டுக்குள் குடிசை வீடுகளே இருக்காது. தமிழகம் குடிசை வீடுகளே இல்லாத மாநிலம் ஆகும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.’’என அவர் பேசினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார்.