கோவிட்-19 மேலாண்மைக்கான 23-ஆவது அமைச்சர்கள் குழு கூட்டத்தில் காணொலிகாட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று காணொலி காட்சி மூலம் பேசுகையில், “கோவிட் மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கடந்த ஓராண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி, முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி வகுத்த, ஒட்டு மொத்த அரசு மற்றும் சமூக அணுகுமுறை காரணமாக கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் 12,000-க்கும் குறைவாகவே புதிய தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.73 லட்சமாக குறைந்துள்ளது.
146 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக புதிய தொற்று கண்டறியப்படவில்லை. 18 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாகவும், 6 மாவட்டங்களில் கடந்த 21 நாள்களாகவும், 21 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களாகவும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. இப்போது ஒரு நாள் 12 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய இந்த நெருக்கடி நிலையிலும் இந்தியா இதர நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி விநியோகித்து உதவியுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது” என்றார்.