இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானம், ஜகார்த்தாவின் சுகர்னோ ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போர்னியோ தீவில் உள்ள போன்டியானக் என்ற இடத்திற்கு புறப்பட்டுச் சென்றது. 90 நிமிடங்களில் போன்டியானக் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் அந்த விமானம் ஜகர்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது ரேடாரில் இருந்து விமானம் மறைந்துள்ளது. இதுகுறித்து விமான நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஜகர்த்தா அருகே கடல் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும். கடல் பகுதியில் விமான உதிரி பாகங்களும், சில உடல்களும் கண்டுபிடிக்கப்படுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 130 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் எத்தனைபேர் பயணித்தார்கள் என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.