பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா நேரத்தில் 28 மாநிலத்தின் மக்களுக்கு உதவி செய்தார். இதற்காக ஒருகட்டத்தில் அவரது பத்துகோடி மதிப்பிலான சொத்தையும் அடகுவைத்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் சோனு சூட் செய்த சேவையைப் பாராட்டி தெலுங்கானா மாநிலத்தின் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்பதண்டா என்னும் கிராமத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோயில் முன்பு ஊர்மக்கள் நடனமாடியும், ஆரத்தி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோயில் கமிட்டி உறுப்பினர் கிரி கெண்டால் ரெட்டி, ‘நிறைய மக்களுக்கு உதவி செய்த சோனுசூட் எங்களுக்கு கடவுள்தான்’ என சொல்லியிருந்தார்.
இதோ இப்போது சோனுசூட் இன்னொரு சேவையை செய்து அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தப்போவான் ஹைட்ரொபவர் திட்டத்தில் எலெக்ட்ரீசியனாக இருந்தவர் ஆலம்சிங் புண்டிர். இவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனால் வருமானம் இழந்த இவர் குடும்பத்தில் இவரது மனைவியும், நான்கு குழந்தைகளும் தவித்தனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் நான்கு குழந்தைகளான அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகிய நன்கு குழந்தைகளையும் தத்தெடுத்ததோடு இனி இது என் குடும்பம் என சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்