குயின்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை கங்கனா ரணாவத். அடுத்த ஆண்டும் ‘தனு வெட்ஸ் மனு’ படத்திற்காக மீண்டும் தேசிய விருது வாங்கி பாலிவுட்டின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகி விட்டார். ‘குயின் ஆப் பாலிவுட்’ என ரசிகர்கள் கொடுத்த அன்பு அடைமொழிக்கு சொந்தக்காரர். இப்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து, கருத்து தெரிவித்து வந்தார் கங்கனா.
அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், ஹிந்தியில் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உலகத்தின் முன்பு இன்று நாம் நகைப்புக்குள்ளாகியுள்ளோம். நம்மிடம் எந்த தன்மானமும் மீதம் இல்லை. விருந்தினராக மற்ற நாட்டு பிரதமர் இருந்தால்கூட கவலையில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை தேசத்தின் நற்பெயரை குறைத்து விட்டது. விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரையும் ஜெயிலில் தள்ள வேண்டும். செய்த தவறுக்கு அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.