தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு சிறப்புத்திட்டங்களும் உள்ளன. 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பள்ளிகளில் கணிப்பொறி அறிவியல் அறிமுகம் செய்யப்படுகிறது.
2021_22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் யுனெட்டட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் என்னும் புதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயனடைவர். இதன் மூலம் குடும்பத்தலைவர் இயற்கையாக மரணம் அடைந்தால் 2 லட்சம் காப்பீட்டுத்தொகை கிடைக்கும். குடும்பத் தலைவர் விபத்தில் மரணமடைந்தால் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் கிடைக்கும். குடும்பத் தலைவர் நிரந்தர இயலாமைக்கு ஆளானால் 2 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
அம்மா விரிவான மருத்துவக்காப்பீட்டுக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கிட rights என்னும் பெயரில் சிறப்புத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1650 புதிய மருத்துவ இடங்களை உருவாக்கும்வகையில் 11 மருத்துவக்கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும்.’’எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.