நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளதாக கூறிய வேகத்தில் அந்த திட்டத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். ரசிகர்கள் போராட்டம் நடத்தியும் ரஜிஜி தனது முடிவில் உறுதியாக உள்ளார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என தொண்டர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற தலைவர் சுதாகர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினியின் மனைவி லதா கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவியது. மேலும் ரஜினி கட்சித் தொடங்க உள்ளதாக கூறியபோது தலைமை ஒருங்கிணைப்பாளர் என அவரே அறிமுகப்படுத்திய அர்ஜூன மூர்த்தி புதிதாக கட்சி தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்திருகிறார்.
மேலும் லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவிவரும் தகவல் வதந்தி என்றும், வரும் சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் சுதாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.