காக்க காக்க படத்தை தளபதி விஜய் ரிஜக்ட் செய்ய காரணம் இதுதானா?
இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறகு தனது ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் வாயிலாக கோலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்டது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்று கூறலாம். மின்னலே என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர் காக்க காக்க என்கிற திரைப்படத்தின் மூலம் கொடிகட்டி பறந்தார்.
சமீபத்தில் சில ஆண்டுகளாக கோலிவுட்டில் இவரது பெயர் டேமேஜ் ஆகி வருகின்றது. ஒருபுறம் படத் தயாரிப்பில் இறங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டார், மறுபுறம் இவர் இயக்கிய படங்கள் ரிலீசாகாமல் போராடி வருகின்றது. இந்த நிலையில் இவர் சினிமா துறையில் நுழைந்து 20 வருடங்கள் ஆகி உள்ளது .இதனை முன்னிட்டு பிரபல வார இதழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார் .அதில் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்
மின்னலே படத்திற்கு பிறகு ஜோதிகா மற்றும் நக்மா இவரிடம் சொந்த தயாரிப்பில் படம் எடுக்க கதைகள் கேட்டுள்ளனர். அப்போது இவர் காக்க காக்க ஸ்கிரிப்ட்டை கூறியுள்ளார். நடிகை ஜோதிகாவுக்கு இந்த ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்துவிட்டதாம்.அவரின் உதவியால் தான் இந்தப்படம் டேக் ஆப் ஆனது என்பதும் கூறியுள்ளார் .மேலும் நந்தா படத்தை பாருங்க சூர்யா இந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். சூர்யா நடிப்பதற்கு முன்பு இந்த படத்தை அஜித், விக்ரம் மற்றும் தளபதி விஜய்க்கு சொல்லி அவர்களில் யாருமே நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. விஜய்க்கு படத்தில் முதல் பாதி ரொம்ப பிடித்து போய்விட்டதாம் எனினும் இரண்டாம் பாதி காரணமாக தான் இந்த படத்திற்கு அவர் ஓகே சொல்லவில்லையாம்.
எப்போதும் கௌதம் மேனனின் ஸ்டைல் என்னவெனில் 80 அல்லது 90 சதவீத ஸ்கிரிப்ட் ரெடி செய்துவிட்டு ஷூட்டிங் ஆரம்பித்து விடுவார்.பின்னர்தான் கதையோட்டத்திற்கு ஏற்ற காட்சிகளை மாற்றி அமைப்பார். எனினும் விஜய் முழு கதையும் ரெடியாக இல்லாததால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் தற்போது கவுதம் மேனன் படத்தில் நடிக்க முடியாத காரணம் இதுவாக தான் இருந்து வருகின்றது