கேரள அரசு போக்குவரத்து கழகம் தனது ஊழியர்கள் இரவு நேரங்களில் ஓய்வு எடுப்பதற்காக ஒரு பேருந்தை குளிர்சாதன வசதி, படுக்கை வசதியுடன் மறுவடிவமைப்பு செய்துள்ளது. ஒரம்கட்டப்பட்ட ஒரு பேருந்த்து கேரள மாநிலம் மாவேலிக்கரா பனிமனையில் படுக்கை வசதி, குளிர் சாதன வசதி, உணவு உண்ணும் மேஜை வசதியுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு கோட்டயம் போக்குவரத்து பனிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் இலவசமாக தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் இரண்டு அடுக்குகளில் 16 ஊழியர்கள் தங்கிக் கொள்ளலாம். அவர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைக்க் பெட்டக வசதியும் இந்த பேருந்துகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பரவல் துவங்கிய நாட்களில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற கேரள போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர்களுக்காக இதுமாதிரியான பேருந்துகள் முதலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டன. அதை பின்பற்றியே இந்த ஓய்வு எடுப்பதற்கான பேருந்தும் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது