புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய வரும் 28 ஆம் தேதி மத்தியகுழு தமிழகம் வருகிறது. தமிழகத்தில் புரெவி புயலால் 25 மாவட்டங்களில் கனமழை பெயதது. இதனால் ஆறு லட்சம் ஏக்கர் விவசாய பரப்பு சேதமடைந்தது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில் ஏற்கனவே சேதமான பகுதிகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள ஆய்வுசெய்ய மத்தியக்குழு வரும் 28 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது. இந்த ஆய்வுக்குப்பின் மத்தியக்குழுவின் அறிவுரைப்படி, புள்ளிவிபரங்கள் இறுதிசெய்யப்பட உள்ளன. இதில் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விபரங்கள் கணினியில் பதிவுசெய்யப்படும். இதன் பின்னர் பயிர்சேதம் குறித்த முழுமையான அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளது. தமிழக அரசு புரெவி புயல் தொடர்பாக மத்திய அரசிடம் 1514.06 கோடி தேவை எனவும், அதில் தற்காகிகப் பணிகளுக்காக 484.97 கோடியும், நிரந்தரப் பணிகளுக்காக 1020.90 கோடியும் தேவை என கோரிக்கைவைத்துள்ளது.