புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தானும் தனது எ.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இருவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் சிவகொழுந்துவிடம் கொடுத்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். டில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் அக்கட்சியில் இணைந்தனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சி தாவிய முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆகியோரால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.