ராகுல் காந்தி லோக்சபா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பங்களாவை ஒரு மாதத்துக்குள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி தனது தகுதிநீக்கத்தால் இன்னும் பல சலுகைகளை இழக்கிறார். மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் முதல் பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட ரூ.16 அலோவன்ஸ் வரை ஏராளமான சலுகைகளை பறிகொடுக்கிறார். அவர் இழக்கும் சலுகைகள் என்னென்ன? என்பது பற்றிய முழுதகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குஜராத் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி இந்த வழக்கை தொடர்ந்தார். 4 ஆண்டு விசாரணையை தொடர்ந்து ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் தான் டெல்லியில் ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ஒரு மாதத்துக்கு பிறகு காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சலுகைகள் என்னென்ன? தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் இழக்கும் சலுகைகள்? பற்றிய விபரங்களை தேட தொடங்கி உள்ளனர். அதற்கு விடையாக தான் இந்த செய்தி இருக்கும்.
மேலும் இந்தியாவில் ஒருமுறை எம்பியாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் பென்சன் உண்டு. மாதம் ரூ.25 ஆயிரம் பென்சன் கிடைக்கும். இந்தியாவில் எம்பிக்களின் சம்பளம் மற்றும் அலோவன்ஸ், சலுகைகளை சேர்த்தால் இது சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி நாட்டின் எம்பிக்களை விட அதிகமாகும். ஆனால் வெறும் சம்பளத்தை மட்டும் பார்த்தால் மேற்கூறிய நாடுகளில் இருந்து இந்தியா பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.