தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் பண்ரூட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிடுகிறார். இதற்கான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ‘பண்ருட்டியில் ஏற்கனவே இருமுறை போட்டியிட்டு வென்றுள்ளேன். இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
தமிழ் சமூகத்துக்கு என்னால் ஆன பணிகளைச் செய்வேன். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமும், திமுக கூட்டணி நாளுக்கு, நாள் பலமும் அடைந்துவருகிறது. தேமுதிக வெளியே போயிருப்பதால் அதிமுகவுக்கு தொகுதிக்கு 5 ஆயிரம் வாக்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.’’என்றார் அவர்.