நாகை மாவட்டம் அருகே ரயில் முன் பாய்ந்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆவராணி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ்பாபு தனது
நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதித்ததால் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால்
தான் விவசாய இடுபொருள்கள் வாங்குவதற்காக வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த சோகத்திலேயே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.