சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தமிழகத்தை வெகுவாகவே பாராட்டினார். அதில், தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்பின் திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். கல்லணை கால்வாய் சீரமைப்பு, தஞ்சை ,புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் பயன் அடையும் .அர்ஜூன் பீரங்கி தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கின்றது. கொரோனா வைரஸ் காலத்திலும் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் ரயில் பாதை குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது நீராதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர் நீர் மேலாண்மையும் சிறந்து விளங்கி உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது தமிழகம். கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்தினால் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்கள் பயனடையும். இந்திய மீனவர்களை எண்ணி நாம் பெருமை கொள்கின்றோம். மீன்பிடித் தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.