தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையிலான தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. அதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “அதிமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடும். எங்கள் கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
எங்களுடைய நோக்கமும் கோரிக்கையும் வன்னியர்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதாம். தமிழக அரசு அதை நிறைவேற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவேதான் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தே பெற்றுள்ளோம். இருப்பினும் எங்களது பலம் குறையப்போவது இல்லை. நிச்சயம் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்” எனக்கூறினார்.