சர்வேதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் கொரோனா வைரசுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. இது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையிலும் எதிரொலித்து வருகிறது.
அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையால் பெட்ரோல் டீசலுக்கு முறையை 60 சதவீதம் மற்றும் 86 சதவீதம் வரை வரியை மத்திய, மாநில அரசுகள் விடுகின்றன. இதனால் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகின்றது. கடந்த சில தினங்களாகவே ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு அடைந்திருக்கின்றது. சென்னையில் பெட்ரோலின் விலை நேற்று இரவில் இருந்து 23 காசுகள் உயர்ந்து உள்ளது லிட்டருக்கு 91 ரூபாய் 19 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது .அதேபோல் டீசலின் விலை 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டருக்கு 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே நிலை நீடித்தால் விரைவில் 100 ரூபாயை தொடும் என்று அச்சம் வாகன ஓட்டிகள் இடையே நிலவி வருகின்றது.
எரிபொருள் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து விடுமோ என்றும் பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது .பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்து வருகின்றது