ஒரு வருடத்துக்கும் மேலாக கொரோனாவின் பிடி உலகமெங்கும் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. முதலில் வந்த கொரோனா வைரஸை ஒரு வழியாக கட்டுப்படுத்திய மட்டில் தற்பொழுது உருமாறிய கொரோனா பரவ தொடங்கியுள்ளது.
இந்த உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த வாரம், சனிக்கிழமை முதல் தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கரல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அதிபர் ஜோ பைடன் தடை விதிக்க உள்ளார் என அமெரிக்காவின் மூத்த பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இன்று திங்கள்கிழமை முதல் பிரேசில், யூகே, அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் 26 நாடுகளின் பயணிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக பதவியேற்ற உடனேயே அமெரிக்காவை காக்கும் நோக்கில் இவ்வாறு அதிரடி முடிவு எடுக்கப்பட்டதால் ஜோபைடனுக்கு கொஞ்சம் வரவேற்பு கிடைத்துள்ளது.